உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 29, 2010

செயின்ட் ஜோசப் கல்லூரி தின விழா

கடலூர் :

                             கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி தின விழா நடந்தது. கல்லூரி செயலாளர் ரட்சகர் தலைமை தாங்கினார். செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஆக்னல் முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள் சின்னப்பன், ரொசாரியோ ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். சிறப்பு விருந்தினர்கள் சிப்காட் ஆர்க்கிமா பெராக்சைடு கம்பெனி துணைத் தலைவர் ஆனந்தஜோதி மற்றும் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி முதல்வர் வள்ளி ஆகியோரை பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன் அறிமுகப்படுத்தினார்.

                          மாணவர் கார்த்திகேயன், மாணவி ஹேமாஸ்ரீ  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சியில் ஆர்க்கிமா பெராக்சைடு நிர்வாக அதிகாரி சாமிநாதன், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், சிறந்த 3ம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப் பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior