உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 29, 2010

தொலைதூரக்கல்வி மைய பாடங்கள் வானொலியில் ஒலிபரப்பு

சிதம்பரம்:
 
             சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி இயக்ககத்தில் பயிலும் பல்வேறு துறை மாணவர்களுக்கான பாடங்கள் புதுச்சேரி,​​ சென்னை,​​ திருச்சிராப்பள்ளி,​​ கோயம்புத்தூர் ஆகிய அகில இந்திய வானொலி நிலையங்களில் முதல் அலைவரிசையில் ஒலிபரப்பப்படுகிறது. இவ்வாண்டுக்கான பாடங்கள் மே 9-ம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கு ஒலிபரப்பாக உள்ளது.​ மே 8,9 தேதிகளில் மட்டும் மாலை 5 மணிக்கே இப்பாடங்கள் ஒலிபரப்பாகும். 30 நிமிட கால அளவிலான தமிழ்,​​ ஆங்கிலம்,​​ சமூகவியல்,​​ பொருளாதாரம்,​​ வணிகம்,​​ மக்கள் தொகையியல்,​​ அரசியல் பொது நிர்வாகம்,​​ காவல் நிர்வாகத்துறை மாணவர்களுக்கான இப்பாடங்களின் ஒலிபரப்பை கேட்டு பயன்பெறுங்கள் என புதுச்சேரி வானொலி நிலைய இயக்குநர் கல்யாணி ராமச்சந்திரன் பத்திரிகை செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior