உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 29, 2010

புதுவண்டிப்பாளையத்தில் தேர் திருவிழா : எம்.எல்.ஏ., அய்யப்பன் வடம் பிடித்தார்

கடலூர் : 

                 கடலூர் புதுவண்டிப் பாளையம் சிவ சுப்ரமணிய சாமி கோவில் பங் குனி உத்திரத்தையொட்டி நேற்று தேர் திருவிழா நடந்தது.
 
                  கடலூர் புதுவண்டிப் பாளையம் சிவ சுப்ரமணிய சாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், இரவில் உற்சவர் வீதியுலா நடந்து வருகிறது. கடந்த 25ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி, பெரியநாயகி சமேதராய் பாடலீஸ்வரர் புதுவண்டிப்பாளையம் சிவசுப்ரமணியசாமி கோவிலில் எழுந்தருளினார். அன்று இரவு பெரியநாயகி சமேதர் பாடலீஸ்வரர் முன்னிலையில் திருக்கல்யாண உற்சவமும், அதனைத் தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேதராய் முருகர் வீதியுலா நடந்தது. நேற்று 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து உற்சவர் அலங்கரித்து காலை 7.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். தேரை எம்.எல்.ஏ. அய்யப்பன், சேர்மன் தங்கராசு, அருணகிரி மற்றும் முக்கியஸ்தர்கள் உட்பட பொதுமக்கள் வடம் பிடித்து  இழுத்தனர். மாலை தேர் கோவிலை வந்தடைந்தது. இன்று காலை 6 மணிக்கு 108 சங்காபிஷேகமும், 12 மணிக்கு யாகசாலை கலச பூஜை நடக்கிறது. மாலை அபிஷேகமும், தொடர்ந்து உற்சவர் வீதியுலா நடக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior