உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 29, 2010

விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜ., கையெழுத்து இயக்கம்


கடலூர் : 

                 விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த  தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாவட்ட பா.ஜ., சார்பில் கடலூரில் கையெழுத்து இயக்கம் நடத்தப் பட்டது.

                 விவசாயி உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு சரியான விலை இல்லாமல் விவசாயம் சீரழிந்து வருகிறது. ஆனால் அத்தியாவசிய பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. இதனைக் கண்டித்தும், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் தீவிரவாதத் தைக் கட்டுப்படுத்தாதது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்காததால் அவர்கள் திசை மாற காரணமாக உள்ள மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, கடலூர் மாவட்ட பா.ஜ., சார்பில்  பொதுமக்களிடம் கருத்தறியும் கையெழுத்து இயக்கம் நடத்தினர். கடலூர் பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகக்குழு குணா தலைமை தாங் கினார். ராஜா, அகஸ்தியபாரதி, வக்கீல் சுரேஷ், நகர அமைப்பாளர் வெங்கடேசன், துரைராஜ், தனக் கோடி, புருஷோத்தமன், வாணிதாசன், ஜான்சுந்தர் ராஜ், ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior