உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 29, 2010

விருத்தாசலம் நகரத்தில் மின்தடை நேரம் மாற்றம்

விருத்தாசலம் :

       விருத்தாசலம் நகர பகுதியில் மின் தடை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விருத்தாசலம் கோட்ட செயற் பொறியாளர் சிவராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:


                    விருத்தாசலம் கோட்டம் பூதாமூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் நகர பகுதிகளான பூதாமூர், சிதம்பரம் ரோடு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கடலூர் ரோடு, பாலக்கரை, ஜங்ஷன் ரோடு, ஆயியார் மடம், பழமலை நாதர் நகர், பஸ் நிலையம், சரோஜினி நகர், புதுப்பேட்டை, திரு.வி.க., நகர், காட்டுக்கூடலூர் ரோடு, தாஷ்கண்ட் நகர், செல்வராஜ் நகர், பெரியார் நகர், பெரியகண்டியாங்குப்பம், அண்ணா நகர், சத்திநகர், எம்.ஆர்.கே., நகர், கம்பர் நகர், காந்தி நகர், அரசு மருத்துவமனை, மணலூர், சேலம் ரோடு, தென்கோட்டை வீதி, வடக்கு கோட்டை வீதி, கடை வீதி, பெரியார் டெப்போ, பி.எஸ்.என்.எல்., அலுவலகம், காலேஜ் ரோடு ஆகிய பகுதிகளுக்கு இன்று மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலும், வயலூர், நாச்சியார்பேட்டை, வி.என்.ஆர்., நகர், முல்லை நகர், தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior