உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 29, 2010

மேய்ச்சலுக்கு வந்த கிளை மான் மர்மமான முறையில் இறந்தது

திட்டக்குடி : 
 
                 திட்டக்குடி அருகே மேய்ச்சலுக்கு வந்த கிளை மான் மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
 
                      கடலூர் மாவட்டம், திட்டக்குடி சுற்றுப் பகுதிகளில் அரசுக்கு சொந்தமான காட்டில் உள்ள வன விலங்குகள் கோடை காலங்களில் உணவு மற் றும் தண்ணீரை தேடி நகர பகுதிகளுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் ஏரி பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்த கிளை மான் ஒன்று நேற்று காலை மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி விவசாயி மணி கொடுத்த தகவலின் பேரில், மாவட்ட வன அலுவலர் துரைசாமி உத்தரவின்படி, தொழுதூர் வனவர் ஏகாம்பரம், வனக்காவலர் தில்லைகோவிந்தன் ஆகியோர் விரைந்து வந்து, ஏரிக்கரையில் இறந்த கிடந்த மானை கால்நடை மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்து அதே பகுதியில் புதைத்தனர். மேலும், மான் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior