உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 29, 2010

டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்

கடலூர் :

               டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் கடலூரில் நடந் தது.

                   மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட  செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.  கடலூர் வட்ட தலைவர் காமராஜ் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் சரவணன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் தஞ்சாவூரில் நடந்த மாநில செயற் குழு கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. சட்டசபையில் நமது துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாஸ்கரன், ஏகாம்பரம், செல்வம் உட் பட பலர் பங்கேற்றனர். மாவட்ட துணை தலைவர் பழனிவேல் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior