உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 29, 2010

கிள்ளையில் தென்னிந்திய மீனவர்கள் கூட்டமைப்பு சம்மேளன சங்கம் துவக்கம்

கிள்ளை :

                சிதம்பரம் அருகே கிள்ளை கலைஞர் நகர் இருளர் குடியிருப்பில் தென்னிந்திய மீனவர்கள் கூட்டமைப்பு சம்மேளன சங்க  துவக்க விழா நடந்தது.
பேரூராட்சி கவுன்சிலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சங்க பொருளாளர் ரவி வரவேற்றார். மண்டல அலுவலர் பில்ஜின் மொரைஸ், ஊக்க அலுவலர் பட்சிராஜன், புதுச்சேரி கள அலுவலக பொறுப்பாளர் கார்த்திகேயன் முன் னிலை வகித்தனர். 'ஐபாடு' திட்டத்தின் மூலம் சுனாமியால் பாதித்த மீனவர்கள் மற்றும் இருளர்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் 'சிஸ்' அமைப்பில் துவக்கப்பட்ட தென்னிந்திய மீனவர்கள் கூட்டமைப்பின் சம்மேளன சங்கத்தை தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர் சத்தயமூர்த்தி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கிள்ளை சென்ட்ரல் பாங்க் மேலாளர் லியாகத் அலி, திட்ட அலுவலர் பாஸ்கர் பேசினர். சங்க தலைவர் பாண்டியன் மற்றும் கிராம நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். சங்க செயலாளர் தங்கராசு நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior