உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 29, 2010

விழுப்புரம்-மயிலாடுதுறை மார்க்கத்தில் கூடுதல் ரயில் இயக்க கோரிக்கை

கடலூர் :

                  விழுப்புரம்-மயிலாடுதுறை மார்க்கத்தில் கூடுதல் ரயில் இயக்க வேண்டுமென பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து கடலூர் மாவட்ட பயணிகள் சங்க உறுப்பினர் சிவக்குமார் விடுத்துள்ள அறிக்கை: 

                      விழுப்புரம்-மயிலாடுதுறை மார்க்கத்தில் புதிய கால அட்டவணையில் சோழன், கம்பன், சேது எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ராமேஸ்வரத்திலிருந்து புவனேஸ்வரத்திற்கும், வாரணாசிக்கும் புதிய ரயில் அறிமுகப்படுத்துவது பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக் கும். தற்போது வாரம் ஒரு முறை இயக்கப்படும் என அறிவித்துள்ள இந்த ரயில்களை தினமும் இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த தடத்தில் திருச்சியிலிருந்து திருப்பதிக்கு கும்பகோணம்-மயிலாடுதுறை கடலூர் வழியாக விரைவு ரயிலும், கும்பகோணம்-சென்னை இடையே அதிவிரைவு சகாப்தி, ஜனசகாப்தி ரயில்களை இயக்க வேண்டும். கன்னியாகுமரி, நாகர் கோவில், திருநெல்வேலி, மதுரை பயணிகள் பயன் பெறும் வகையில் தஞ்சாவூர் மயிலாடுதுறை வழியாக கன் னியாகுமரி- எழும்பூர் இடையே புதிய ரயிலை இயக்க வேண்டும்.

                   அண்ணாமலைப்பல்கலைக்கழகம் மற்றும் விழுப்புரம் மயிலாடுதுறை இடையே இயங்கும் பொறியியல் கல்லூரி, பிற கல்லூரி மாணவ மாணவிகள், அலுவலர்கள் பயன் பெறும் வகையில் காலை மற்றும் மாலை வேளையில் பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior