உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 29, 2010

சத்துணவு ஊழியர்களுக்கு முட்டை உணவு தயாரிக்க பயிற்சி


பண்ருட்டி : 

                 பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு பொது சுகாதாரம், முட்டை உணவு தயாரித் தல் பயிற்சி முகாம் நடந்தது.
 
                பொது சுகாதாரம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நடந்த இரண்டு நாள் முகாமிற்கு பி.டி.ஓ.,க்கள் மனோகரன், தமிழரசி தலைமை தாங்கினார். துணை பி.டி.ஒ., சீனுவாசன் முன்னிலை வகித்தார். சேர் மன் கவுரி பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். முகாமில் பொது சுகாதாரம், நோய்தடுப்பு முறைகள், சுற்றுசுழல் குறித்து அரசு டாக்டர்கள் சங்கரி, கிருபானந்த், மேற் பார்வையாளர் கணேசன், சுகாதார ஆய்வாளர்கள் அரிகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார் வையாளர் பால்ஜெயல், உதவி தொடக்க கல்வி அலுவலர் பராங்குசம் மற்றும் சத்துணவு ஊழியர்கள் 200பேர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior