உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 22, 2010

கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு 25ம் தேதி நேர்காணல்

கடலூர் :

             அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள்  காப்பீடு திட்ட முகவர்களுக்கான நேர்காணல் வரும் 25ம் தேதி விருத்தாசலம் முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கிறது.

இது குறித்து விருத்தாசலம் கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப் பாளர் பாலகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
 

            அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்ட முகவர்களுக்கான நேர்காணல் வரும் 25ம் தேதி விருத்தாசலம் முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத் தில் பகல் 2 மணிக்கு நடக்கிறது. இதில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களது கல்வி மற்றும் வயது சான்றுகளுடன் பங்கேற்கலாம். வயது 18 முதல் 60 வயதிற்கு உட்பட்டிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் வசிக்கும் ஊரில் மக்கள் தொகை 5000க்குள் இருந்தால்  பத்தாம் வகுப்பு கல்வி தகுதி சான்றும், மக்கள் தொகை 5000 மேல்  இருந்தால் பிளஸ் 2  வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

                     முன்னாள் இதர காப்பீடு முகவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், ஓய்வு பெற்ற  ஆசிரியர்கள்,  சுய வேலை வாய்ப்பில் இருக்கும் இளைஞர்களும் இத்திட்டத்தில் சேரலாம். கம்ப்யூட்டர் இயக்கும் திறமை உடையவர்கள் மற்றும் உள்ளுர் பகுதிகளை முழுமையாக அறிந்திருப்பது அவசியம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட் டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior