உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 22, 2010

கார் கவிழ்ந்தது: 4 பேர் தப்பினர்

கடலூர் :

              கடலூர் பெண்ணையாற்று பாலம் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த 4 பேர் உயிர்தப்பினர்.

                 புதுச்சேரியை சேர்ந்தவர் மாதவன்(30). இவர் சென்னையில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் தனது மனைவி நித்யா(23), உறவினர்கள் மணி(62), ஜமுனா(53) ஆகியோருடன் சிதம்பரம் கோவிலுக்கு சென்றுவிட்டு இரவு புதுச்சேரிக்கு திரும்பி சென்றுக் கொண்டிருந்தார். கடலூர் பெண்ணையாற்று பாலம் அருகே சென்றபோது, குறுக்கே ஒருவர் வரவே, அவர் மீது மோதாமல் இருக்க மாதவன் சடன் பிரேக் போட்டார். அதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. காரில் பயணம் செய்த நான்கு பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior