உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 22, 2010

விருத்தாசலத்தில் முந்திரி சாகுபடி பயிற்சி முகாம் துவக்க விழா


விருத்தாசலம் : 

               விருத்தாசலம் வேளாண்மை பல்கலை கழக மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் முந்திரி சாகுபடி பயிற்சி முகாம் துவக்க விழா நடந்தது.
 
                    ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ஜெயராஜ் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் மாரிமுத்து வரவேற்றார். வேளாண் அறிவியல் நிலைய தலைவர் சாத்தையா முந்திரி பருப்பு மற்றும் பழங்களின் முக்கியத்துவம் குறித்தும், ஏற்றுமதி சந்தை வாய்ப்புகள் குறித்தும் பேசினார். முந்திரி விளைச்சலை அதிகரிக்க கடைபிடிக்க வேண்டிய மேலாண்மை தொழில் நுட்பங்கள் குறித்து இணை பேராசிரியர் அனீசாராணி பேசினார். பேராசிரியர் ஜீவா, இணை பேராசிரியர் அம்பேத்கார், உதவி பேராசிரியர் கண்ணன் மற்றும் முந்திரி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior