உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 22, 2010

மணிமுத்தாற்றில் பாலம் கிராம மக்கள் எதிர்பார்ப்பு

சிறுபாக்கம் :

           வேப்பூர் அருகே மணிமுத்தாற்றில் பாலம் கட்ட வேண்டும் என நான்கு கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

                    வேப்பூர் அடுத்த பா.கொத்தனூர் ஊராட்சியில் சுமார் 4 ஆயிரத்துக் கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியின் குறுக்கே மணிமுத்தாறு சென்று பிரிப்பதால் இரு பகுதிகளுக்கும் பொதுமக்கள் மழைகாலத்தில் சென்று வர சிரமப்பட்டு வருகின்றனர். மழைக்காலத்தில் வெள்ள நீர் பெருக்கெடுத்து செல்லும் போது ஒரு பகுதியில் இருந்து மறு பகுதிக்கு செல்வது தடைபடுகிறது. இதனால் பா.கொத்தனூர் ஊராட்சியை இரண்டாக பிரிக்கும் மணிமுத்தாற்றால் கூத்தக்குடி, மரூர் உள்பட 4 கிராம மக்களின் போக்குவரத்துக்கு வசதியாக பாலம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior