உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 22, 2010

நான்கு பெண்களின் கண்கள் தானம்


சிதம்பரம் : 

           சிதம்பரத்தை சேர்ந்த மூன்று மூதாட்டிகள் உள் ளிட்ட நான்கு பெண்களின் கண்கள் தானமாக வழங் கப்பட்டது.
 
                சிதம்பரம் பள்ளிப் படை கந்தையாபிள்ளை மனைவி பிச்சம்மாள் (90), மாலைக்கட்டித்தெரு சுப்ரமணியன் மனைவி சுசீலா(44), கொத்தங்குடி தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி திரிபுரசுந்தரி (84), சடகோபன் நகரை சேர்ந்த சுப்ரமணியன் மனைவி கிருஷ்ணவேனி(75) ஆகிய நான்கு பேர் இறந்தனர். அவர்களின் கண்களை தானமாக வழங்க காஸ்மோ பாலிட்டன் அரிமா சங்க தலைவர் கமல்கிஷோர் ஜெயின், செயலாளர் விஜயகுமார் தாலேடா, பொருளாளர் மனோகர், புதிய தலைவர் முருகப்பன் ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.
 
                    அதையடுத்து இறந்தவர்கள் கண்களை தானமாக வழங்க அவர்களது குடும்பத்தார் முன்வந் தனர். அதையொட்டி ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் பாரதி, ஆஷா, சண்முகம் ஆகியோர் உதவியுடன் கண்கள் பெறப் பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஆண்டில் இதுவரை 103 கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior