உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 22, 2010

வக்கீல் சங்கத்தில் ஸ்டாம்ப் விற்பனை நுகர்வோர் பேரவை கோரிக்கை

புவனகிரி :

             கோர்ட் ஸ்டாம்புகளை வக்கீல் சங்கம் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என புவனகிரி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து புவனகிரி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை செயலாளர் ஜெயபாலன், சட்ட ஆலோசகர் குணசேகரன் ஆகியோர் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: 

            தமிழ்நாட்டில் உள்ள கோர்ட்டுகளில் வழக்குகளுக்காக 1,2,5,10 ரூபாய்க் கான கோர்ட் ஸ்டாம்புகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். கோர்ட் ஸ்டாம்புகளை விற்பனை செய்யும் உரிமம் பெற்றவர்களில் ஒரு சிலர் செயற்கையான தட்டுப் பாட்டை உருவாக்கி அரசு நிர்ணயம் செய்த விலையை விட 50 பைசா முதல் 3 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு விற்கின்றனர். அரசு உரிமம் பெற்றவர்களிடம் ஒரு சில வியாபாரிகள், சட்ட விதிகளை மீறி கோர்ட் ஸ்டாம்புகள் மற்றும் முத்திரை தாள்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்கின்றனர். இதனால் அப்பாவி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே முத்திரை தாள்கள் மற்றும் கோர்ட் ஸ்டாம்புகளை கூடுதல் விலைக்கு விற் பனை செய்வதை தடுக்க வக்கீல்கள் சங்கத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior