உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 22, 2010

கவர்னர் விருதுக்கு தேர்வான சாரண மாணவர்களுக்கு பாராட்டு

ராமநத்தம் :

         கவர்னர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ம.புடையூர் சாரண, சாரணிய மாணவர்கள் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.

        நெய்வேலி என்.எல்.சி., உயர்நிலைப்பள்ளியில் சாரண, சாரணிய மாணவர்கள் ஆளுநர் விருதுக்காக (ராஜ்யபுரஸ்கர்) தேர்வு செய்ய மாநில அளவில் நடத்தப்பட்ட எழுத்து தேர்வு, முடிச்சுகள் போடுதல், திசையறிதல், கட்டுகள் போடுதல், கூடாரம் அமைத்தல் ஆகிய தேர்வுகளில் ராமநத்தம் அடுத்த ம.புடையூர் அரசு மேல்நிலைப் பள்ளி சாரண, சாரணிய மாணவர்கள் வெற்றி பெற்று, கவர்னர் விருதுக்கு தகுதி பெற்றனர். இம்மாணவர்களுக்கு பாராட்டு விழா ம.புடையூர் பள்ளி வளாகத்தில், தலைமை ஆசிரியர் இளங்கோவன் தலைமையில் நடந்தது. இதில் சாரண, சாரணியர்கள் குருச்சந்திரன், ரமேஷ், சதீஷ்குமார், நதியா ஆகியோரை உதவி தலைமை ஆசிரியர் ரத்தினம், பசுமைப்படை  ஆலோசகர் ஞானபிரகாசம், ஜே.ஆர்.சி., ஆலோசகர் சுப்ரமணியன் வாழ்த்தி கவுரவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior