உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 22, 2010

மீன் பிடிக்கச் சென்றவர் கடலில் தவறி விழுந்து பலி

கடலூர் :

              கடலில் மீன் பிடிக்கச் சென்றவர் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

                      மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் நடராஜன்(46). மீன்படி தொழில் செய்யும் இவர் குள்ளஞ்சாவடி ரயிலடி பகுதியில் வசித்து வந் தார். நடராஜன், நாயக்கர்பேட்டையைச் சேர்ந்த நாகரத்தினம் உட்பட ஐந்து பேர் கடந்த 16ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கடந்த 18ம் தேதி இரவு 7.30 மணி அளவில் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது நடராஜன் படகிலிருந்து தவறி கடலில் விழுந்தார். உடன் இருந்தவர்கள் கடலில் குதித்து தேடியும் நடராஜன் கிடைக்கவில்லை. நள்ளிரவு 12 மணிக்கு நடராஜன் உடல் கண்டெடுத்து கரைக்கு கொண்டு வந்தனர். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior