உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 22, 2010

தரமின்றி சாலை அமைக்கும் பணி பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்


ராமநத்தம் : 

                ராமநத்தம் அருகே தரமின்றி போடப்பட்ட சாலைப் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
 
               மங்களூர் ஒன்றியம் மேலக்கல்பூண்டி- லட்சுமணபுரம் வரை உள்ள 5கி.மீ., சாலை நெடுஞ்சாலை துறை சார்பில் பல லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. பழுதடைந்த சாலையை முற்றிலுமாக பெயர்த்து எடுத்து பின்னர் பெரிய ஜல்லியை கொட்டி சமப்படுத்தி, அதன் மீது சிறிய ஜல்லி கொண்டு சாலை அமைக்க வேண்டும். ஆனால் தற்போது சாலை அமைக்கும் பணியை கான்ட் ராக்ட் எடுத்தவர், பழைய சாலையை பெயர்க்காமல் அதன் மீது பெரிய ஜல்லியை கொட்டி சாலை அமைத்துள்ளனர். இதற்கு ஊற்றிய தாரும் அதிக அளவில் மண்ணெண்ணெய் கலந்திருந்ததால், சாலை தரமின்றி அமைக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக வடகராம்பூண்டி, கொரக்கவாடி உள்ளிட்ட பகுதிகளில் சாலை அமைத்த சில வாரங்களிலேயே ஜல்லிகள் பெயர்ந்துள்ளன. 

                       இதேபோன்று கொ.குடிகாடு -லட்சுமணபுரம் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனைக் கண்டு ஆவேசமடைந்த கொ.குடிகாடு கிராம மக்கள் ரங்கராயர் தலைமையில் திரண்டு சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். மேலும், கான்ட்ராக்டரை சந்தித்து பழைய சாலையை பெயர்த்து முறையாக சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior