உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 22, 2010

ரோட்டில் கிடந்த அதிர்வெடியால் சிதம்பரம் அருகே திடீர் பரபரப்பு

கிள்ளை :

               சிதம்பரம் அருகே வெடிக்காமல் கிடந்த அதிர் வெடியால் பரபரப்பு ஏற்பட்டது.

                      சிதம்பரம் அடுத்த கிள்ளை சாலையில் மண்டபம் சுடுகாடு எதிரில் குடியிருப்பு நிறைந்த சாலை ஓரத்தில் அரை கிலோ எடையுள்ள நாட்டு அதிர் வெடி (சணலால் செய்யப் பட்டது) கிடந்தது. அதை பார்த்த அப்பகுதியினர் நாட்டு வெடிகுண்டாக இருக்குமோ என அச்சம் கொண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சிதம்பரம் டி.எஸ்.பி., மூவேந்தன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அது அதிர் வெடி என்பதும், கடந்த 11ம் தேதி அப்பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்ததற்காக நடந்த இறுதி ஊர்வலத்தில் வெடிக்காமல் தூக்கி வீசப்பட்ட வெடி என தெரியவந்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior