உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 17, 2010

ஆசிரியரை தாக்கி மனைவியின் தாலி பறிப்பு முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்

நெல்லிக்குப்பம்: 

                            வீட்டின் முன் நின்றிருந்த தனியார் பள்ளி ஆசிரியரை தாக்கி, அவரது மனைவியின் கழுத்தில் இருந்த தாலி செயினை பறித்துச் சென்ற முகமூடி கொள்ளையர்கள் நால் வரை போலீசார் தேடிவருகின்றனர். கடலூர் அடுத்த கோண்டூர் சுப்புலட்சுமி நகரைச் சேர்ந்தவர் சிவபாக்கியன் (58).  புதுச்சேரி மாநிலம் பாகூர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தமிழ்க்கொடி(48), மகன் கவுசிக் (19), மகள் சிவதமிழ்க்கோதை (14). நேற்று முன்தினம் நள்ளிரவு சிவபாக்கியன் சிறுநீர் கழிக்க கதவை திறந்து வைத்துவிட்டு தெருவுக்கு வந்தார். அப்போது  முகமூடி அணிந்த நான்கு பேர் வந்தனர். நீங்கள் யாரை பார்க்க வேண்டுமென்று சிவபாக்கியன் கேட்டார்.  முகமூடி ஆசாமிகள் இருவர் சிவபாக்கியனை பிடித்து கொண் டனர். மற்ற இருவரும் தடியால் தாக்கினர்.  வலி தாங்காமல் சிவபாக்கியன், திறந்து இருக் கும் வீடு தான் தன்னுடையது எனக்கூறினார். சிவபாக்கியனை கீழே தள்ளிய அவர்கள் வீட்டிற்குள் சென்று தமிழ்க்கொடி கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தாலிச்செயின், சிவதமிழ்க்கோதையின் இரண்டு சவரன் செயினையும் அறுத்தனர். கவுசிக் கூச்சலிடவே, நான்கு பேரும் அங்கிருந்து தப்பினர். பலத்த காயமடைந்த சிவபாக்கியன், செயினை அறுக்கும்போது கழுத்தில் காயமடைந்த தமிழ்க் கொடி இருவரும் கடலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior