உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 17, 2010

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை உயர ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும்: சி.இ.ஓ.,


ஸ்ரீமுஷ்ணம்:

                    அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர ஆசிரியர்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும் என  எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ., பேசினார். ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள நாச்சியார் பேட்டை, ஸ்ரீஆதிவராகநல்லூர், ஸ்ரீமுஷ்ணம் குறுவட்ட  தாய்வு மையங்களில் ஆசிரியர்களுக்கு செயலாராய்ச்சி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

ஸ்ரீஆதிவராகநல்லூர் மையத்தை ஆய்வு செய்த அனைவருக்கும் கல்வி திட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  கதிர் வேலு பேசியதாவது:

                    தொடக்க நிலை ஆசிரியர்களின் நினைவுகள் குழந்தைகள் மனதில் பதிவதால் படித்து பெரியவர்களாக ஆன நிலையில் கூட குழந்தைகள் மறக்க மாட்டார்கள். எனவே ஆரம்ப நிலையில் கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் பணியை முழு மனதுடன் செய்ய வேண்டும். தற்போது அரசு பள்ளிகளில் இடவசதி போதுமான அளவு உள்ளது. ஆசிரியர் கள் அதிக அளவில் நியமிக் கப்பட்டு வருகின்றனர். தனியார் பள்ளிகளில் சுற்றுப்புற சூழ்நிலை இல் லாத நிலையிலும், மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது.  ஆனால், அரசு பள்ளிகளில் போதுமான இடவசதி, சுற்றுப் புற சூழ்நிலைகள் இருந்தும் மாணவர்களின் சேர்க்கை விகிதம் உயரவில்லை. ஆசிரியர்கள் பள்ளி வயது பிள்ளைகளின் பட்டியலை தயார் செய்து பெற் றோர்களிடம் பேசி அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவருக்கும் கல்வி திட்டத்தில் வழங்கும் உபகரணங் களை முழுமையாக பயன்படுத்துங்கள். பயன்படுத்தாத பொருட்கள் பயனற்றதாகிவிடும் என பேசினார். மாவட்ட திட்ட அலுவலர் செல்வம், வட்டார வள மேற்பார்வையாளர் காமராஜ், ஒருங்கிணைப் பாளர்கள் செல்வம், சிற்றரசன், ரவி  உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior