உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 17, 2010

கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்ற எதிர்ப்பு: கடலூரில் கல்லூரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

கடலூர்: 

                   அரசு கல்லூரி மற்றும் உதவி பெறும் கல்லூரிகைளை ஒருமை பல்கலைக் கழகங்களாக மாற்ற  எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவினர் நேற்று கடலூரில் உண்ணாவிரதம் இருந்தனர். அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளை சுய நிதி பல்கலைக் கழங்களாக மாற்ற அரசு முடிவு எடுத்துள்ளது. இவ்வாறு மாற்றினால் கல்வி கட்டணம் உயர்வு, இனவாரியான ஓதுக்கீடு நிறுத்தம், கட்டாய நன்கொடை வசூல் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் மறுக்கப்படும் என்பதால், அரசு கல்லூரிகளை சுயநிதி பல்கலைக் கழகங்களாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தனர். போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக வட்டாரத் தலைவர் கவாஸ்கர் தலைமை தாங்கினார்.

               பல்கலைக் கழக ஆசிரியர் சங்க செயலாளர் பேராசிரியர்கள் சாந்தி, ரியாஸ் முன்னிலை வகித்தனர். சங்க பொருளாளர் சம்பத் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்தார். தொலை தொடர்பு துறை மக்கள் தொடர்பு அதிகாரி பால்கி,  அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் பொதுச் செயலாளர் மருதவாணன், பல்கலைக் கழக ஆசிரியர் சங்கங்களின் தலைவர் அனுசுயா, இணை செயலளர் பேராசிரியை குழந்தை தெரஸ்பாத்திமா, விழுப்புரம் மாவட்ட செயலாளர் மகாதேவன், திண்டிவனம் வட்ட செயலாளர் கருணாநிதி, விருத்தாலம் செயலாளர் நாராயணன், கடலூர் மனோகரன், சிதம்பரம் சேகர் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior