உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 17, 2010

பாலத்தில் கம்பிகள் திருட்டு பயணிகள் திக்...திக்... பயணம்

நடுவீரப்பட்டு:

                   நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையே நரியன் ஓடையில் கட்டப்பட் டுள்ள சிறிய உயர்மட்ட பாலம் கைப்பிடி கம்பிகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. நடுவீரப்பட்டு-சி.என்.பாளையம்  இடையே உள்ள நரியன் ஓடையில் 12 ஆண்டிற்கு முன் சிறிய உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. பாலத்தின் இருபுறமும் தடுப்பிற்கு இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு பகுதியில் இருந்த இரும்பு கம்பிகள் சில மாதங்களுக்கு முன் திருடு போனது. மேலும், பாலம் சற்று உள்வாங்கியுள்ளதால் மேடு, பள்ளமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பாலத்தின் வழியே செல்லும் போது அச்சத்துடன் சென்று வருகின்றனர். விபரதம் நடக்கும் முன் அதிகாரிகள் பாலத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior