உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 17, 2010

பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர்:

                  பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள், ஊழியர்கள் சங் கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கடலூர் பி.எஸ்.என். எல்., பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய தொலைத் தொடர்பு ஊழியர் சம்மேளன மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். எம்ப்ளாயீஸ் யூனியன் செயலாளர் சம்பந்தம், தேசிய சங்க செயலாளர் ஜெயராமன், அதிகாரிகள் சங்க செயலாளர் பாண்டுரங்கன், ராஜநாயகம், வெற்றிவேல் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் 30 சதவீத பங்கு விற்பனையை கைவிட வேண்டும். அவுட்சோர்சிங் திட்டத்தை கைவிட வேண்டும். சாம்பிட்ரோடா பரிந்துரையை நிராகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior