உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 17, 2010

கருவை கலைத்து மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் கைது

சேத்தியாத்தோப்பு: 
 
                கருவை கலைத்து மனைவியை கொடுமைப் படுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.
 
                   ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் ஆனந்த் (22). இவரும், அதே ஊரை சேர்ந்த ராஜமாணிக்கம் மகள் சங் கீதா (18)வும் மூன்றாண்டாக காதலித்து வந்தனர். கடந்த ஏழு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். சங்கீதா மூன்று மாதம் கர்ப்பமான நிலையில், ஆனந்த் தற்போது நமக்கு குழந்தை வேண்டாம்,  கருவை கலைத்துவிடுமாறு கூறினார். இதற்கு சங்கீதா மறுத்துள்ளார். இருந்தும் ஆனந்த் சங்கீதாவை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்தார். அதன்பின் ஆனந்த், அவரது தந்தை ராதாகிருஷ்ணன், தாய் பானுமதி, பெரியப்பா மகன்கள் ஜானகிராமன், கிருஷ் ணன் ஆகியோர் சங்கீதாவை கொடுமைப்படுத்தி வந்தனர். இதுகுறித்து சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, ஆனந்தை கைது செய்தனர். மேலும், ராதாகிருஷ் ணன் உள்ளிட்ட 4 பேரை தேடிவருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior