உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 17, 2010

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் வருவாய் கிராம ஊழியர் சங்கம் தீர்மானம்

கடலூர்: 

                 தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மண்டல மாநாடு கடலூர் டவுன்ஹாலில் நடந்தது. மாநாட்டில் வருவாய் கிராம ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கிராம ஊழியர் களின் கல்வி, பணி மூப்பு மற்றும் நிர்வாக அனுபவங்கள்  அடிப்படையில் வருவாய்த்துறையில் உள்ள காலி பணியிடங்களில் நிரப்ப வேண்டும். சிறப்பு சேம நலநிதி முழுமையாக வழங்க வேண்டும். புதிதாக பணி நியமனம் செய்த 3724 கிராம ஊழியர்களுக்கும் பணி வரன்முறை, பணி பதிவேடு, புதிய ஊதிய விகிதப்படி ஊதிய உயர்வு உடனடியாக வழங்க வேண்டும். கிராம ஊழியர்களை கிராம நிர்வாக பணியை தவிர மாற்று பணியில் ஈடுபடுத்தக்கூடாது. கிராம மக்களின் வாழ்க்கைமுறை அவர்களின் பிரச்னைகள், தேவைகள், நில புலங்கள் குறித்த அனைத்து தகவல்களும் கிராம ஊழியர்கள் மூலம்தான் அதிகாரிகளுக்கு தெரிய வருகிறது. எனவே கிராம ஊழியர்களின் பரிந்துரையின் பெயரிலேயே சான்றுகள் வழங்க அரசு ஆணையிடவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior