உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 17, 2010

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

சிதம்பரம்:

                      சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக பொறியியல் புல மின் னணு மற்றும் கருவியியல் துறையின் இரண்டு நாள் கருத்தரங்கை துணைவேந்தர் ராமநாதன் துவக்கி வைத்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புல மின்னணு மற்றும் கருவியியல் துறையில் இரண்டு நாட்கள் கருத்தரங்கு துவங்கியது. முதல்வர் பழனியப்பன் தலைமை தாங்கினார். துறைத்தலைவர் நடராஜன் வரவேற்றார். ணைவேந்தர் ராமநாதன் கருத்தரங்கை துவக்கி வைத்தார். உதவி பேராசிரியர் மாலதி கருத்தரங்கின் முக்கியத்துவம்,நோக்கம் குறித்த அறிக்கையை வெளியிட்டு பேசினார். 
  
                          கருத்தரங்கில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். நேற்று முன்தினம் நடந்த கருத்தரங்கில்  சென்னை  "நரியுரேன் கண்ட்ரோல்ஸ்' என்ற தனியார் தொழில் துறை நிறுவனத்தில் இருந்து சிறப்பு விருந்தினர்களாக டெனிஸ் ஜெயக்குமார், இன்ஜினியர்கள் சிவக்குமார், கண்ணன், அன்பழகன் பங்கேற்று தொழிற்சாலைகளை  இயந்திரமாக்கலுக்கான மென் கட்டுப் பாட்டுக் கருவி(பி.எல்.சி) குறித்தும், பழுதுபார்க்கும் முறை குறித்து பல்கலைக்கழக பேராசிரியர்களுடன் விவாதித்தனர். செய் முறை பயிற்சி அளிக்கப் பட்டது.  கிருஷ்ணன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior