உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 17, 2010

கடலூரில் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

கடலூர்:

                    போலீஸ் துறையை கண்டித்து மா.கம்யூ., சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் மா.கம்யூ., கிளை செயலாளர் வேலுசாமி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை உடன் கைது செய்ய வேண்டும். கந்து வட்டி வாங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவுடித்தனம் மற்றும் போலீஸ் துறையின் மெத்தனப் போக்கை கண்டித்து கடலூர் நகர மா.கம்யூ., சார்பில் உழவர் சந்தை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங் கினார். ஒன்றிய செயலாளர் மாதவன் முன்னிலை வகித்தார். மாநில குழு உறுப்பினர் தனசேகரன் கண்டன உரையாற்றினார். நகர செயலாளர் சுப்புராயன், சிப்காட் பகுதி செயலாளர் ஆளவந்தார், கற் பனை செல்வம், உதயகுமார், முத்துவேல், நாராயணன், ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior