உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 17, 2010

தடையற்ற மின்சாரம்: விவசாயிகள் கோரிக்கை


சிறுபாக்கம்: 

                சிறுபாக்கம் பகுதிகளில் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுபாக்கம் மற்றும் மங்களூர் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய மின்மோட்டார் மற்றும் பல்வேறு உபயோகங்களுக்கு மங்களூர் துணைமின் நிலையம் மூலம் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. அண்மை காலமாக தினசரி நான்கு மணி நேரம் மட்டுமே பகலில் மின் மோட்டார்களுக்கு மும் முனை மின்சாரம் வழங் கப்படுகிறது. சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வந்த மின் சாரம் கடந்த சில வாரங்களாக குறிப்பிட்ட நேரத்திற்கு தொடர்ச்சியாக வழங்குவதில்லை.

                   இதனால் சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களின் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் எப் போது மின்சாரம் வரும் என வயலில் காத்திருக்க வேண்டியுள்ளது. துணைமின் நிலையத்தின் பராமரிப்பு பணிக் காக மின் நிறுத்தம் செய்ய அறிக்கை விடும் அதிகாரிகள், விவசாய பம்பு செட் டுகளுக்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரத் தினை வினியோகிக்கும் காலங்களை முன்கூட்டியே அறிவித்தும், அறிவிக்கப்பட்ட காலத்தில் தடையின்றி மின்சாரம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior