உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 17, 2010

கடலூரில் திடீர் தீ விபத்து ரூ.ஒரு லட்சம் சேதம்

கடலூர்: 
 
                    கடலூர் வண்ணாரப்பாளையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரண்டு வீடுகள் எரிந்து ஒரு லட் சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. கடலூர் வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்தவர் நாராயணன். அதே பகுதியில் கூரை வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். வீட்டின் மற்றொரு பகுதியில் அஞ்சலைதேவி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இப்பகுதியில் நேற்று பகல் 12 மணிக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டு 2 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. அப்போது நாராயணன் வீட்டில் மின் ஒயரில் தீப்பொறி ஏற்பட்டு கூரை தீ பிடித்து எரிந்தது. சற்று நேரத்தில் தீ அஞ்சலைதேவி வீட்டிற்கும் பரவியது. தகவலறிந்த கடலூர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும்  வீட்டில் இருந்த "டிவி', மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior