உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 17, 2010

சொர்ண ஜெயந்தி திட்டத்தில் பெண்களுக்கு ஊக்கத் தொகை

நெல்லிக்குப்பம்:

                      நெல்லிக்குப்பத்தில் பெண்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி ஊக்கத்தொகையை சேர்மன் வழங்கினார். கடலூர் மாவட்டத்தில் சொர்ண ஜெயந்தி திட்டத்தின் கீழ் திருச்சி மண்டல பொறியியல் கல்லூரியும், அறிவியல் தொழில்நுட்ப முனைவோர் பூங்கா நிறுவனமும் இணைந்து 10, 12ம் வகுப்பு படித்த பெண்களுக்கு செல்போன் பழுது பார்த்தல் பயிற்சி அளிக் கின்றனர். 9ம் வகுப்பு படித்த பெண்களுக்கு கம்ப்யூட்டர் பழுது நீக்கம் பயிற்சியும் அளிக்கின்றனர். இப்பயிற்சி பெறும் பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. நெல்லிக்குப்பம் நகராட்சியில் பொன்விழா ஆண்டு நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் 19 பெண்களுக்கு ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையை சேர்மன் கெய்க்வாட்பாபு வழங்கினார். பொறியாளர் புவனேஸ்வரி, எழுத்தர் பாபு, செந்தில், செந்தாமரைக் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior