உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 03, 2010

காட்டுமன்னார்கோவில் அருகே தீ விபத்து: 9 கடைகள் எரிந்து சேதம்

 சிதம்பரம் : 

                   காட்டுமன்னார்கோவில் அருகே நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது கடைகள் எரிந்து சேதமடைந்தன. காட்டுமன்னார்கோவில் அடுத்த கொள்ளுமேடு கடைத்தெருவில் உள்ள ஷபீக்கூர் ரகுமான் டீக் கடை நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. இதனையடுத்து அருகில் இருந்த அப்துல்லா, ரகமதுல்லா, அன்வர்தீன், உபைது, பக்கீர் முகமது, முகமது யூனுஸ், அப்துல் கத்தார், ஜக்காரியா ஆகியோரது கடைகள் எரிந்தன. தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் கிருஷ் ணமூர்த்தி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து புத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior