உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 03, 2010

ஜமுக்காள விரியன் பாம்புகள் பிடிபட்டன


கடலூர் : 

                  கடலூரில் இரண்டு ஜமுக்காள விரியன் பாம்புகளை வனத்துறையினர் பிடித்தனர். கடலூர் எஸ்.பி., முகாம் அலுவலகம் பின் புறம் பாழடைந்த கட்டடத்தில் உள்ள தொட்டியில் இரண்டு பாம்புகள் இருந்தன. அதனை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வனசரகர் பன்னீர்செல்வம் தலைமையில் வனவர் ராஜேந்திரன், கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த பாம்பு பிடிப்பவர் பூனம்சந்த் வியாஸ் உள்ளிட்டோர் சென்று இரண்டு பாம்புகளையும் பிடித்தனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில் 

                   'இரண்டு பாம்புகளும் ஜமுக்காள விரியன் எனப்படும் கட்டு விரியன் இனத்தைச் சேர்ந்தது. இரண்டு பாம்புகளையும் நாளை (இன்று) விருத்தாசலத்தில் உள்ள அரசு காட்டில் விடப்படும்' என்றனர்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior