உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 03, 2010

ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழுக் கூட்டம்


சிதம்பரம் : 

                     தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது. மாநில தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். துணை பொது செயலாளர் செல்வராஜ், மணி முன்னிலை வகித் தனர். மாவட்டத் தலைவர் சிற்றரசன் வரவேற்றார். மாநில செயலாளர் போத்திலிங்கம் வேலை அறிக்கை வாசித்தார். குமராட்சி ஒன்றித்தின் சார்பில் கட்டட நிதி வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ராபர்ட் ஜெயராஜ் பணி நீக்கத்தை ரத்து செய்யக் கோரி ஏப்ரல் 7, 8, 9 தேதி உண்ணாவிரதம், 10ம் தேதி கண்டன பேரணி நடத்துவது, பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் இடை நிலை ஆசிரியர்களை மாற்று பணிக்காக நியமித்ததை ரத்து செய்தல் குறித்து பேசப்பட்டது. கலியமூர்த்தி, மனோகர், வெங்கடேசன், மகாலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநில துணைத் தலைவர் வெங்க டேசன் நன்றி கூறினார். ஏற்பாட்டினை மாவட்ட செயலாளர் ஜீவாநந்தம் மற்றும் வட்டார நிர்வாகிகள் செய்திருந்தனர்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior