உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 03, 2010

தொடர் திருட்டு: சிதம்பரம் நகர மக்கள் அச்சம்

சிதம்பரம் : 

               சிதம்பரம் பகுதியில் அடுத்தடுத்து நடக்கும் தொடர் திருட்டு சம்பவங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சிதம்பரம் வேங்கான் தெருவில் வசித்து வருபவர் சங்கர். ஓமியோபதி டாக்டர். கடந்த 17ம் தேதி குடும் பத்துடன் சொந்த ஊரான ராஜபாளையம் சென்றிருந்தார். நேற்று திரும்பி வந்த போது வீட்டின் ஓடுகள் உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது மேஜை டிராயரில் இருந்து 33 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது.இதே போன்று மரவாடி உரிமையாளரான சிதம்பரம் கனகசபை நகர் 8வது குறுக்குத் தெருவை சேர்ந்த செந்தில்குமார் நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக குடும்பத்துடன் ஹாலில் படுத்து தூங்கியுள்ளார். அதிகாலை எழுந்து பார்த்தபோது பீரோ உடைக்கப் பட்டு தாலிச் செயின், மோதிரம் உள்ளிட்ட ஆறு சவரன் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது.இதுகுறித்த புகார்களின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.அதே பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு பேராசிரியர் இளங்கோவன் வீட்டில் 5 சவரன் திருடு போனது. ஒரு வாரத்திற்குள் அடுத்தடுத்து நடந்த தொடர் திருட்டு சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.·

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior