உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 03, 2010

எம்.ஏ.​ ஈஸ்வரன் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு ஈரோடு சுதந்திரப் போராட்ட தியாகி

 கடலூர்:

                     ஈரோட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி ஈரோட்டுப் பெரியார் எம்.ஏ.ஈஸ்வரன் வாழ்க்கை வரலாற்று நூலான அருட்செல்வர் ஆவது எப்படி என்ற நூல் வெளியீட்டு விழா,​​ கடலூரில் புதன்கிழமை நடந்தது.​ ​ 

இந்த நூலின் ஆசிரியர் செ.நல்லசாமி பேசுகையில்,​​ 

                    எம்.ஏ.ஈஸ்வரன்,​​ தந்தை பெரியாருடன் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார்.​ பெரியார் கைது செய்யப்பட்டு தமிழக எல்லையில் கொண்டு வந்து விடப்பட்டார். ஆனால் ஈஸ்வரன் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு அங்குள்ள காட்டில் விடப்பட்டார்.​ மயங்கிக் கிடந்த அவரை ஒரு பெண் காப்பாற்றி,​​ அவரது உறவினர்களுக்குத் தகவல் கொடுத்தார்.  மகாத்மா காந்தி மதுரை வந்தபோது,​​ சுதந்திரம் அடையும் வரை திருமணம் செய்து கொள்வதில்லை என்றும்,​​ காலில் செருப்பு அணிவதில்லை என்றும் சபதம் ஏற்றார் ஈஸ்வரன்.​ இறுதி வரை திருமணமே செய்துகொள்ளவில்லை என்றார் நல்லசாமி.​ ​  ஈஸ்வரனின் வாழ்க்கை வரலாற்று நூலை,​​ அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் கடலூர் மாவட்டத் தலைவர் பட்டாம்பாக்கம் வேங்கடபதி வெளியிட்டார்.​ முதல் பிரதியை கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன் பெற்றுக் கொண்டார். பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior