உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 03, 2010

'களை' எடுக்கும் டிராக்டர்: விவசாயிகளுக்கு பயிற்சி


திட்டக்குடி : 

                 திட்டக்குடி அடுத்த பட்டூர் கிராமத்தில் கரும்பு விவசாயிகளுக்கு குழியுரம் இடுதல் மற்றும் குறுகிய டிராக்டர் மூலம் களை எடுத்தல் மூலம் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் அடங்கிய செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலை துணை மேலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கி, குழியுரம் மற்றும் குறுகிய டிராக்டரின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். சிவநேசன் முன்னிலை வகித்தார். கரும்பு ஆய்வாளர் பார்த்திபன் வரவேற்றார். இதில் குழியுரம் இடுவதன் மூலம் கரும்பு மகசூல் 10 டன் வரை கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் உரம் விரயம் தவிர்ப்பு, பயிர் வீரியத்துடன் ஆண்டுதோறும் ஒரே சீரான வளர்ச்சி, மகாராஷ்டிரா மாநிலத்தில் சராசரியாக ஏக்கருக்கு 120 டன் என ஆயிரத்து 200 டன் வரை கரும்பு மகசூல் கிடைத் துள்ளதாகவும் பயிற்சியில் தெரிவிக்கப் பட்டது. பயிற்சியில் ஊராட்சி தலைவர் அமிர்தலிங்கம் கரும்பு ஆய்வாளர்கள் முருகேசன், பாரதிமோகன், வைத்தியநாதன், ரவிச்சந்திரன், தர்மதுரை உள்ளிட் டோர் பங்கேற்றனர்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior