உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 03, 2010

அண்ணாமலைப் பல்கலை பேராசிரியர் ஆஸ்திரேலியா பயணம்

 சிதம்பரம்:

               சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை பேராசிரியர் இரா.சிங்காரவேல் ஆராய்ச்சி மேற்கொள்ள 6 மாத பயணமாக ஆஸ்திரேலியாவுக்கு வெள்ளிக்கிழமை பயணம் சென்றார். பேராசிரியர் இரா.சிங்காரவேல் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் என்டோவர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.​ மேலும் முதுநிலை முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக ஆஸ்திரேலியாவில் உள்ள முர்டாக் பல்கலைக்கழகத்தில் கடலோர களர் உவர் நிலங்கள்,​​ இயற்கை உரங்களைக் கொண்டு ஒருங்கிணைந்த பயிர் மற்றும் உர நிர்வாகம் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்கிறார்.​ இவ்வாராய்ச்சியின் முடிவுகள் இந்திய மற்றும் தமிழக கடலோர களர் உவர் நிலங்களை மேம்படுத்தி பயிர் உற்பத்தியைப் பெருக்க பயனாக அமையும் என இரா.சிங்காரவேல் தெரிவித்துள்ளார்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior