உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 03, 2010

'ஹவாலா' கும்பல் போலீஸ் விசாரணை


கடலூர் : 

                  கடலூர் வழியாக 'ஹவாலா' பணம் கடத்தியவரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.கடலூர் வழியாக 'ஹவாலா' பணம் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் சென்னையிலிருந்து கடலூர் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 12 லட்சம் ரூபாய் வைத்திருந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். சென்னையிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அந்த பணத்தை எடுத்து செல்வது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அந்த நபரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior