உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 03, 2010

சேத்தியாத்தோப்பில் அரிய வகை ஆந்தை


சேத்தியாத்தோப்பு : 

                  சேத்தியாத்தோப்பு அருகே பாழடைந்த கிணற்றில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அரிய வகை ஆந்தைகள் பிடிபட்டது. முடிகண்டநல்லூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப்பிரமணியன். இவரது வீட்டின் அருகே பாழடைந்த கிணறு உள்ளது. அந்த கிணற்றில் வெள்ளை கலரில் அரிய வகையான ஆந்தை இருப்பதை பார்த்த சுப்பிரமணியன் சிதம்பரம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் வனத் துறை அலுவலர் விஜயன் உத்தரவின்படி வனவர் சிதம்பரம் மற்றும் வனத்துறையினர் கிணற்றில் இருந்த ஆந்தையை வெளியே எடுத்தனர். மேலும் அந்த கிணற்றில் 4 ஆந்தை குஞ்சுகள் அங்கு இருந்தது தெரியவந்தது. அவற்றையும் பத்திரமாக மீட்டனர். பிடிபட்ட ஆந்தைகள் ஆஸ்திரேலியாவை சேர்ந்த அரியவகை இனத்தைச் சேர்ந்ததாகும்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior