உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 03, 2010

என்.எல்.சி., அதிகாரி ஜீப் மோதி பைக்கில் சென்றவர் பலி: மூவர் காயம்


நெய்வேலி : 

                   நெய்வேலியில் என்.எல்.சி., அதிகாரி ஜீப் மோதியதில் பைக்கில் சென்றவர் இறந்தார்.

                      என்.எல்.சி. இரண்டாம் சுரங்கத்தில் முதன்மை மேலாளராக பணி செய்து வருபவர் சண்முகசுந்தரம் (56). இவர் நேற்று மதியம் இரண்டாம் சுரங்கத்திலிருந்து வீட்டிற்கு ஜீப்பில் வந்து கொண்டிருந்ததார். மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த செந்தில்குமரன் (36) அவரது நண்பர் சந்திரசேகர் (42) இவர்கள் இருவரும் டவுன்ஷிப்பிலிருந்து மந்தாரக்குப்பம் நோக்கி மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். முதல் சுரங்கம் பி.பாயிண்ட் அருகே வந்த போது என்.எல்.சி., அதிகாரி சண்முக சுந்தரம் சென்ற ஜீப், எதிரே வந்த செந்தில்குமரன் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. பைக் மீது மோதாமல் இருக்க ஜீப் டிரைவர் சந்திரசேகர் (46) சடன் பிரேக் போட்டபோது ஜீப்பில் இருந்த என்.எல்.சி., அதிகாரி சண்முக சுந்தரம் வெளியே தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் காயமடைந்த டிரைவர் சந்திரசேகர் உள்ளிட்ட 4 பேரும் என். எல்.சி. பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு பைக்கில் பின்னால் உட்கார்ந்து வந்த சந்திரசேகர் இறந்தார். படுகாயமடைந்த என்.எல்.சி. அதிகாரி சண்முகசுந்தரம் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். டிரைவர் சந்திரசேகர் மற்றும் செந்தில்குமரனுக்கும் என்.எல்.சி. பொது மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior