உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 04, 2010

100-க்கும் மேற்​பட்ட வெளி​மா​நில வாக​னங்​களுக்கு அபராதம்

 

கடலூர் மாவட்டத்தில் சாலை வரி செலுத்தாமல் இயக்கப்படும் வாகனங்களை சோதனையிடும் கடலூர் புதுநகர் போலீசார்


சிதம்​ப​ரம்:

                 சிதம்​ப​ரம் பகு​தி​யில் வெளி​மா​நி​லங்​க​ளில் பதிவு செய்து தமி​ழ​கத்​தில் வரி கட்டாமல் இயக்​கப்​ப​டும் இரு​சக்​கர வாக​னங்​கள் போலீ​சாரால் திங்​கள்​கி​ழமை பிடிக்​கப்​பட்டு அப​ரா​தம் விதிக்​கப்​பட்​டன.​ க​ட​லூர் மாவட்​டத்​தில் இரு​சக்​கர வாக​னங்​கள் திருட்டை தடுக்​க​வும்,​​ வெளி மாநி​லங்​க​ளில் பதிவு செய்து தமிழ​கத்​தில் வரி கட்​டா​மல் இயக்​கப்​படும் வாக​னங்​களை பிடிக்​க​வும் கட​லூர் மாவட்ட போலீஸ் சூப்​ரண்​டன்ட் அஸ்​வின் கோட்னீஷ் உத்​த​ர​விட்​டார்.​ அ​தன் பேரில் சிதம்​ப​ரம்,​​ அண்​ணா​ம​லை​ந​கர்,​​ கிள்ளை உள்ளிட்ட பகு​தி​க​ளில் திங்​கள்​கி​ழமை இன்ஸ்​பெக்​டர்​கள் பி.சுப்​பி​ர​மண்​யன்,​​ எம்.கே.கண்​ண​பி​ரான்,​​ ஜி.சுப்​பி​ர​ம​ணி​யன் உள்​ளிட்ட போலீ​சார் வாகன தணிக்​கை​யில் ஈடு​பட்​ட​னர்.​ அப்​போது குஜ​ராஜ்,​​ புதுச்​சேரி,​​ ஆந்​திரா,​​ கேரளா உள்​ளிட்ட வெளி மாநி​லங்​க​ளைச் சேர்ந்த 100-க்கும் மேற்​பட்ட வாக​னங்​கள் பிடிக்​கப்​பட்டு அப​ரா​தம் விதிக்​கப்​பட்டன.

கடலூர் போலீசார் ஆய்வு​ 

கட​லூர்:

                  புதுவை மாநி​லத்​தில் பதிவு செய்த இரு சக்​கர வாக​னங்​களை கட​லூர் போலீ​ஸôர்,​​ ஞாயிறு,​​ திங்​கள் ஆகிய இரு​நாள்​கள் ஆய்வு செய்​த​னர்.​ க​ட​லூர் மாவட்​டத்​தில் இயக்​கப்​ப​டும் இரு சக்​கர வாக​னங்​க​ளில் 50 சத​வீ​தம் வாக​னங்​கள் புதுவை மாநி​லத்​தில் பதிவு செய்​யப்​பட்​டவை.​ வரி விதிப்​புக் கொள்​கை​யில் இரு மாநி​லங்​க​ளுக்கு இடையே உள்ள வித்​தி​யா​சமே இதற்​குக் கார​ணம்.​ பிற மாநி​லங்​க​ளைச் சேர்ந்த பலர் புது​வை​யில் போலி​யாக முக​வரி கொடுத்து வாகனங்​க​ளைப் பதிவு செய்​கி​றார்​கள்.​ இத​னால் தீவி​ர​வா​தி​கள் உள்​ளிட்ட பலருக்​கும் வாக​னங்​கள் கிடைப்​பது புது​வை​யில் எளி​தாக இருக்​கி​றது.​ எனவே புதுவை மாநி​லத்​தில் பதிவு செய்து,​​ கட​லூர் மாவட்​டத்​தில் இயக்​கப்​ப​டும் வாக​னங்​களை,​​ மாவட்ட போலீஸ் துணைக் கண்​கா​ணிப்​பா​ளர் அஸ்​வின் கோட்னீஸ் உத்​த​ர​வின்​பே​ரில்,​​ கட​லூர் மற்​றும் பண்​ருட்டி போலீஸ் உள்​கோட்டங்​க​ளில் போலீ​சார் சோத​னையிட்​ட​னர்.​ இந்த சோத​னை​யில் 50-க்கும் மேற்​பட்ட இரு சக்​கர வாக​னங்​கள் பிடி​பட்​டன.​ அந்த வாக​னங்​க​ளின் ஆவ​ணங்​கள் சரி​பார்க்​கப்​பட்​டன.​ அவற்​றில் போலி​யா​னவை எவை என்று போலீ​ஸôர் ஆய்வு மேற்​கொண்டு உள்​ள​னர்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior