உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 04, 2010

காய்​கறி வியா​பா​ரி​கள் சாலை மறி​யல்காய்​கறி வியா​பா​ரி​கள் சாலை மறி​யல்

 பண்​ருட்டி:

                  பண்​ருட்டி காய்​கறி வியா​பா​ரி​கள் நான்கு முனை சந்​திப்​பில் சாலை மறிய​லில் ஈடு​பட்​ட​தால் பர​ப​ரப்பு ஏற்​பட்​டது.​ பண்​ருட்டி நக​ரின் மையப் பகு​தி​யில் ரத்​தி​னம்​பிள்ளை மார்​கெட் இயங்கி வரு​கி​றது.​ பண்​ருட்டி சுற்று வட்​டப் பகு​தி​யில் பயி​ரி​டப்​ப​டும் காய்​க​றி​களை,​​ இங்​குள்ள வியா​பா​ரி​கள் கமி​ஷன் அடிப்​ப​டை​யில் மொத்​த​மாக வாங்கி பல ஊரில் உள்ள வியா​பா​ரி​க​ளுக்கு அனுப்பி விற்​பனை செய்து வரு​கின்​ற​னர்.​

                 மே​லும் தமி​ழ​கம் மற்​றும் வெளி மாநி​லத்​தில் இருந்து வரும் காய்​க​றி​களை வாங்கி நுகர்​வோர்​க​ளுக்கு விற்​பனை செய்து வரு​கின்​ற​னர்.​ நக​ரின் மையப்​ப​கு​தி​யில் மார்​கெட் அமைந்​துள்​ள​தால் அதிக அளவு மக்​கள் வந்து செல்​வர்.​÷இ​த​னால் சில காய்​கறி வியா​பா​ரி​கள் சென்னை சாலையை ஆக்​கி​ர​மித்து வியா​பா​ரம் செய்து வந்​த​னர்.​ இவர்​கள் சாலை​யி​லேயே வாக​னங்​களை நிறுத்தி காய்​க​றி​களை ஏற்றி இறக்கி வந்​த​தால் சென்னை-​கும்​ப​கோ​ணம் சாலை​யில் அடிக்​கடி போக்​கு​வ​ரத்து தடைப்​பட்​டது.​

                 இந்​நி​லை​யில் பண்​ருட்டி தட்​டாஞ்​சா​வ​டி​யில் கட்​டப்​பட்டு செயல்​படாமல் உள்ள உழ​வர் சந்​தையை கடந்த மார்ச் மாதம் பார்​வை​யிட்ட மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன்,​​ உழ​வர் சந்தை செயல்​பட தேவை​யான நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என கூறி​னார்.​ இ​தைத் தொடர்ந்து கடந்த சில நாள்​க​ளுக்கு முன்​னர் கோட்​டாட்​சி​யர் தலை​மை​யில் பண்​ருட்டி வட்​டாட்​சி​யர் அலு​வ​ல​கத்​தில் ஆலோ​ச​னைக் கூட்​டம் நடை​பெற்​றது.​ 

                        இதில் உழ​வர்​கள் காய்​க​றி​களை உழ​வர் சந்​தைக்​கு​தான் கொண்டு செல்ல வேண்​டும்,​​ சென்னை சாலை ஓரத்​தில் வியா​பா​ரி​கள் காய்​க​றி​களை வாங்​கவோ,​​ ஏற்றி இறக்​கவோ கூடாது என தீர்​மா​னித்து மே 1-ம் தேதி முதல் உழ​வர் சந்தை செயல்​ப​டும் என முடி​வெ​டுக்​கப்​பட்​டது.​ இந்​நி​லை யில் திங்​கள்​கி​ழமை காலை போக்​கு​வ​ரத்​திற்கு இடை​யூ​ராக சென்னை சாலை​யில் வாக​னங்​களை நிறுத்தி காய்​கறி ஏற்​றிய வாக​னங்​களை பண்​ருட்டி போலீ​ஸôர் பறி​மு​தல் செய்​த​னர்.​ இ​த​னால் பாதிக்​கப்​பட்ட காய்​கறி வியா​பா​ரி​கள் திடீர் என நான்கு முனை சந்​திப்​பில் சாலை மறிய​லில் ஈடு​பட்​ட​னர்.​ சுமார் 5 நிமி​டம் நடந்த மறி​ய​லால் சென்னை-​கும்​ப​கோ​ணம் சாலை​யில் போக்​கு​வ​ரத்து தடை ஏற்​பட்​டது.​÷த ​க​வல் அறிந்து சம்​பவ இடத்​திற்கு வந்த டிஎஸ்பி.,​​ பிர​சன்​ன​கு​மார்,​​ இன்ஸ்​பெக்​டர் செல்​வம் ஆகி​யோர் மறிய​லில் ஈடு​பட்​ட​வர்​களை காவல் நிலை​யத்​துக்கு அழைத்து சென்று பேச்சு வார்த்தை நடத்​தி​னர்.​ இ​தில் காலை 5 மணி முதல் 8 மணி​வ​ரை​யில் போக்​கு​வ​ரத்​திற்கு பாதிப்பு இல்​லாத வகை​யில் ஒவ்வொரு வாக​ன​மாக நிறுத்தி காய்​க​றி​களை ஏற்றி இறக்க வேண்​டும்.​ மாலை 2 மணி முதல் 4 மணி வரை​யில் உழ​வர் சந்​தை​யில் கொள்​மு​தல் செய்த காய்​க​றி​களை சிறிய வாக​னத்​தில் கொண்டு வந்து இறக்​கிக் கொள்ள வேண்டும்.​ எக்​கா​ர​ணம் கொண்​டும் சாலை​யில் காய்​கறி வாங்கி வியா​பா​ரம் செய்​யக் கூடாது.​ மீறி​னால் உரிய நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என முடி​வெ​டுக்​கப்​பட்​டது.​

                      இக்​ கூட்​டத்​தில் வேளாண்மை வணிக துறை துணை வேளாண்மை இயக்​கு​நர் என்.தன​வேல்,​​ வேளாண்மை அலு​வ​லர் என்.சுரேஷ்,​​ மாவட்ட தொழில் வர்த்​தக சங்​கத் தலை​வர் டி.சண்​மு​கம்,​​ செய​லர் வி.வீரப்​பன்,​​ காய்​கறி வியா​பா​ரி​கள் சங்​கத் தலை​வர் பி.ராஜா உத​ய​கு​மார்,​​ பொரு​ளர் பி.எஸ்.பி.லூர்​து​சாமி,​​ துணைத் தலை​வர் டி.மணி உள்​ளிட்ட பலர் கலந்து கொண்​ட​னர்.​பண்​ருட்டி.மே 3: பண்​ருட்டி காய்​கறி வியா​பா​ரி​கள் நான்கு முனை சந்​திப்​பில் சாலை மறிய​லில் ஈடு​பட்​ட​தால் பர​ப​ரப்பு ஏற்​பட்​டது.​ பண்​ருட்டி நக​ரின் மையப் பகு​தி​யில் ரத்​தி​னம்​பிள்ளை மார்​கெட் இயங்கி வரு​கி​றது.​ பண்​ருட்டி சுற்று வட்​டப் பகு​தி​யில் பயி​ரி​டப்​ப​டும் காய்​க​றி​களை,​​ இங்​குள்ள வியா​பா​ரி​கள் கமி​ஷன் அடிப்​ப​டை​யில் மொத்​த​மாக வாங்கி பல ஊரில் உள்ள வியா​பா​ரி​க​ளுக்கு அனுப்பி விற்​பனை செய்து வரு​கின்​ற​னர்.​ மே​லும் தமி​ழ​கம் மற்​றும் வெளி மாநி​லத்​தில் இருந்து வரும் காய்​க​றி​களை வாங்கி நுகர்​வோர்​க​ளுக்கு விற்​பனை செய்து வரு​கின்​ற​னர்.​ நக​ரின் மையப்​ப​கு​தி​யில் மார்​கெட் அமைந்​துள்​ள​தால் அதிக அளவு மக்​கள் வந்து செல்​வர்.​ இ​த​னால் சில காய்​கறி வியா​பா​ரி​கள் சென்னை சாலையை ஆக்​கி​ர​மித்து வியா​பா​ரம் செய்து வந்​த​னர்.​ இவர்​கள் சாலை​யி​லேயே வாக​னங்​களை நிறுத்தி காய்​க​றி​களை ஏற்றி இறக்கி வந்​த​தால் சென்னை-​கும்​ப​கோ​ணம் சாலை​யில் அடிக்​கடி போக்​கு​வ​ரத்து தடைப்​பட்டது.​ இந்​நி​லை​யில் பண்​ருட்டி தட்​டாஞ்​சா​வ​டி​யில் கட்​டப்​பட்டு செயல்​ப​டா​மல் உள்ள உழ​வர் சந்​தையை கடந்த மார்ச் மாதம் பார்​வை​யிட்ட மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன்,​​ உழ​வர் சந்தை செயல்​பட தேவை​யான நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என கூறி​னார்.​ இ​தைத் தொடர்ந்து கடந்த சில நாள்​க​ளுக்கு முன்​னர் கோட்​டாட்​சி​யர் தலை​மை​யில் பண்​ருட்டி வட்​டாட்​சி​யர் அலு​வ​ல​கத்​தில் ஆலோ​ச​னைக் கூட்​டம் நடை​பெற்​றது.​÷இ​தில் உழ​வர்​கள் காய்​க​றி​களை உழ​வர் சந்​தைக்​கு​தான் கொண்டு செல்ல வேண்​டும்,​​ சென்னை சாலை ஓரத்​தில் வியா​பா​ரி​கள் காய்​க​றி​களை வாங்​கவோ,​​ ஏற்றி இறக்​கவோ கூடாது என தீர்​மா​னித்து மே 1-ம் தேதி முதல் உழ​வர் சந்தை செயல்​ப​டும் என முடி​வெ​டுக்​கப்​பட்​டது.​

                  இந்​நி​லை​யில் திங்​கள்​கி​ழமை காலை போக்​கு​வ​ரத்​திற்கு இடை​யூ​ராக சென்னை சாலை​யில் வாக​னங்​களை நிறுத்தி காய்​கறி ஏற்​றிய வாக​னங்​களை பண்​ருட்டி போலீ​ஸôர் பறி​மு​தல் செய்​த​னர்.​ இ​த​னால் பாதிக்​கப்​பட்ட காய்​கறி வியா​பா​ரி​கள் திடீர் என நான்கு முனை சந்​திப்​பில் சாலை மறிய​லில் ஈடு​பட்​ட​னர்.​ சுமார் 5 நிமி​டம் நடந்த மறி​ய​லால் சென்னை-​கும்​ப​கோ​ணம் சாலை​யில் போக்​கு​வ​ரத்து தடை ஏற்​பட்​டது.​ த​க​வல் அறிந்து சம்​பவ இடத்​திற்கு வந்த டிஎஸ்பி.,​​ பிர​சன்​ன​கு​மார்,​​ இன்ஸ்​பெக்​டர் செல்​வம் ஆகி​யோர் மறிய​லில் ஈடு​பட்​ட​வர்​களை காவல் நிலை​யத்​துக்கு அழைத்து சென்று பேச்சு வார்த்தை நடத்​தி​னர்.​÷இ​தில் காலை 5 மணி முதல் 8 மணி​வ​ரை​யில் போக்​கு​வ​ரத்​திற்கு பாதிப்பு இல்​லாத வகை​யில் ஒவ்​வொரு வாக​ன​மாக நிறுத்தி காய்​க​றி​களை ஏற்றி இறக்க வேண்​டும்.​ மாலை 2 மணி முதல் 4 மணி வரை​யில் உழ​வர் சந்​தை​யில் கொள்​மு​தல் செய்த காய்​க​றி​களை சிறிய வாக​னத்​தில் கொண்டு வந்து இறக்​கிக் கொள்ள வேண்​டும்.​ எக்​கா​ர​ணம் கொண்​டும் சாலை​யில் காய்​கறி வாங்கி வியா​பா​ரம் செய்​யக் கூடாது.​ மீறி​னால் உரிய நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என முடி​வெ​டுக்​கப்​பட்​டது.​ இக்​கூட்​டத்​தில் வேளாண்மை வணிக துறை துணை வேளாண்மை இயக்​கு​நர் என்.தன​வேல்,​​ வேளாண்மை அலு​வ​லர் என்.சுரேஷ்,​​ மாவட்ட தொழில் வர்த்​தக சங்​கத் தலை​வர் டி.சண்​மு​கம்,​​ செய​லர் வி.வீரப்​பன்,​​ காய்​கறி வியா​பா​ரி​கள் சங்​கத் தலை​வர் பி.ராஜா உத​ய​கு​மார்,​​ பொரு​ளர் பி.எஸ்.பி.லூர்​து​சாமி,​​ துணைத் தலை​வர் டி.மணி உள்​ளிட்ட பலர் கலந்து கொண்​ட​னர்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior