உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 04, 2010

வேப்பூர் கூட்ரோட்டில் பஸ் நிறுத்தம்: பயணிகள் எதிர்பார்ப்பு


சிறுபாக்கம்: 

                      விருத்தாசலத்திலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் பஸ்கள் வேப்பூர் கூட்ரோட்டில் நின்று செல்ல வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருத்தாசலத்திலிருந்து வேப்பூர் வழியாக கள்ளக்குறிச்சி வரை அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வியாபாரம், மருத்துவ சிகிச்சைக்காக சென்று பயனடைகின்றனர். இந்த பஸ்கள் வேப்பூர் பஸ் நிலையத்தில் நிறுத்தி, பின்னர் கூட்டுரோடு வழியாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தில் செல்கிறது. சர்வீஸ் ரோடு வழியாக வந்து, கூட்ரோட்டில் நிற்கும் பயணிகளை ஏற் றாமல் நேரடியாக மேம் பாலத்தில் ஏறி செல்கிறது. இதனால் பெரியநெசலூர், சிறுநெசலூர், அரியநாச்சி, என்.நாரையூர் உள்ளிட்ட குக்கிராம மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே விருத்தாசலத்திலிருந்து வேப்பூர் வழியாக கள்ளக்குறிச்சி செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களை வேப்பூர் கூட்ரோட்டில் சர்வீஸ் ரோடு வழியாக நிறுத்திச் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior