உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 04, 2010

நரிக்குறவர்களின் குழந்தைகளுக்கு கலெக்டர் கல்வி உதவித்தொகை


கடலூர்: 

                 நலவாரியத்தில் உறுப்பினராக உள்ள நரிக்குறவர்களின் குழந்தைகள் 54 பேருக்கு கல்வி உதவித் தொகையை கலெக்டர் வழங்கினார். நரிக்குறவர் நலவாரியத்தில் உறுப்பினராக உள்ள குடும்பத்திற்கு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. தற்போது நரிக்குறவர்களின் குழந்தைகள் படிப்பதற்காக கல்வி உதவித் தொகையாக 1 முதல் 6ம் வகுப்பு வரை 500 ரூபாயும், 6ம் வகுப்பு முதல் 1,000 ரூபாயும் வழங்க உத்தவிட்டுள்ளது. அதில் கடலூர் மாவட்டத்தில் 54 நரிக்குறவர் குடும்பங்கள் உதவித்தொகை பெற தகுதியுடையவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் குழந்தைகளுக்கு நேற்று கலெக்டர் சீத்தாராமன் உதவித்தொகை வழங்கினார். பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் அலுவலர் கணபதி, பி.ஆர்.ஓ., முத்தையா உடனிருந்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior