உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 04, 2010

ரேஷன் கார்​டில் புகைப்​ப​டத்தை மாற்றி விவ​சா​யி​யி​டம் நிலம் மோசடி

 கட​லூர்:

               அட​மா​னம் செய்து கொடுத்த நிலத்தை,​​ ரேஷன் கார்டில் புகைப்​ப​டத்தை மாற்றி,​​ பத்​திர மோசடி செய்து விற்​பனை செய்​த​தாக இரு​வ​ரைப் போலீ​சார் தேடி​வ​ரு​கி​றார்​கள்.​ க​ட​லூர் அருகே சோனஞ்​சா​வ​டி​யைச் சேர்ந்த விவ​சாயி கிருஷ்​ண​மூர்த்​தி​யின் மகன் அசோக்​கு​மார் ​(47).​ வைரங்​குப்​பத்​தைச் சேர்ந்த விஜ​ய​ரங்​க​னின் மகன் சதீஷ்​கு​மார் ​(26),​ பழ​நி​வே​லின் மகன் அசோக்​கு​மார் ​(49) ஆகி​யோர் தங்​க​ளது 2.4 ஏக்​கர் நிலத்தை சோனஞ்​சா​வடி அசோக்​கு​மா​ரி​டம் ரூ.​ 40 ஆயி​ரத்​துக்கு 1992-ல் அட​மா​னம் வைத்​த​ன​ராம்.​ 

                    அந்த நிலத்தை திருப்​பித் தரு​மாறு கே.அசோக்​கு​மா​ரி​டம் சதீஷ்​கு​மார்,​​ பி.அசோக்​கு​மார் ஆகி​யோர் அண்​மை​யில் கேட்​ட​ன​ராம்.​ அட​மா​னத் தொகை ரூ.​ 40 ஆயிரம் கொடுத்​தால்,​​ நிலத்​தைத் தந்து விடு​வ​தா​கக் கூறி​னார் சோனஞ்சா​வடி அசோக்​கு​மார்.​ ஆனால் அவர்​கள் பணத்​தைக் கொடுக்​கா​மல் சென்​று​விட்​ட​ன​ராம்.​ இந்​நி​லை​யில் சோனஞ்​சா​வடி அசோக்​கு​மா​ரின் ரேஷன் கார்டை பிரதி எடுத்து வந்து,​​ அதில் பண்ருட்டியை அடுத்த வடக்கு அப்​பி​யம்​பேட்டையைச் சேர்ந்த உக்​கி​ர​வேல் ​(52) என்​ப​வ​ரது புகைப்​ப​டத்தை இணைத்​த​ன​ராம்.​ அந்த ரேஷன் கார்டை பயன்​ப​டுத்தி,​​ அவர்​தான் சோனஞ்​சா​வடி அசோக்​கு​மார் என்று கூறி,​​ பிரச்​னைக்கு உரிய நிலத்தை தொழிற்​சாலை உரி​மை​யா​ளர் ஒரு​வ​ருக்கு விற்று விட்​ட​ன​ராம்.​ இந்த விவ​ரம் அண்​மை​யில்​தான் சோனஞ்​சா​வடி அசோக்​கு​மா​ருக்​குத் தெரி​ய​வந்​தது.​ இது குறித்து மாவட்​டக் காவல் கண்​கா​ணிப்​பா​ள​ரி​டம் புகார் செய்​தார்.​ எஸ்.பி.யின் உத்​த​ர​வின் பேரில்,​​ மாவட்ட குற்றப்​பி​ரிவு போலீஸ் உதவி ஆய்​வா​ளர்​கள் குண​சே​க​ரன்,​​ மகேஸ்​வரி ஆகி​யோர் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்​தி​னர்.​ இது தொடர்​பாக வைரங்​குப்​பம் அசோக்​கு​மார்,​​ சதீஷ்குமார் ஆகி​யோ​ரைப் போலீ​ஸôர் தேடி வரு​கி​றார்​கள்.​

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior