உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 04, 2010

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி எஸ்.பி.,யிடம் மனு

 கடலூர்: 

               காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து மிரட்டி வருவதால் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு கடலூர் எஸ்.பி., அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். நெய்வேலி கங்கைகொண்டான் காலனியைச் சேர்ந்த என்.எல்.சி., கான்ட்ராக்டர் ஜெய்சங்கர். இவரது மகள் இந்துமதி (24). இவரது எதிர்வீட்டைச் சேர்ந்தவர் சுரேஷ் (27). இரண்டாவது சுரங்கத்தில் பணிபுரிந்து வருகிறார். இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இந்துமதியின் வீட்டில் மாப்பிள்ளை பார்க்க துவங்கியதால் அவர் தனது தந்தையிடம் சுரேஷை காதலிப்பதாக தெரிவித்ததால் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்துமதி, சுரேஷுடன் வீட்டை விட்டு வெளியேறி கடந்த மாதம் 30 ம் தேதி மங்களம்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டார். இது பற்றி அறிந்த இந்துமதியின் பெற்றோர் அவர்களது சொந்த பெண்ணாடம் போலீசில் புகார் செய்தனர். இந்திமதி மற்றும் சுரேஷ் நேற்று கடலூர் எஸ்.பி., அஷ்வின் கோட்னீசிடம் 'எங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து போலீசில் புகார் செய்துள்ளனர். தங்களுக்குள்ள செல்வாக்கை பயன் படுத்தி எங்களை பிரித்து விடுவார்கள். மேலும் எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சுகிறோம். எனவே, எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனு கொடுத்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior