உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 04, 2010

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற 16 பேர் தேர்வு

பரங்கிப்பேட்டை: 

                  மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 16 பயனாளிகள் சென்னையில் சிகிச்சை பெற அரசு சிறப்பு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். பரங்கிப்பேட்டை ஒன்றியத்தைச் சுற்றியுள்ள பு.முட்லூர், புதுச்சத்திரம், கவரப்பட்டு, ஆயிபுரம், கிள்ளை உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 16 பயனா ளிகள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற புதுச்சத்திரத்தில் இருந்து சென்னை செட்டிநாடு மருத்துவமனைக்கு அரசு சிறப்பு பஸ்சில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். சிறப்பு பஸ்சை சேர் மன் முத்துபெருமாள் கொடியசைத்து அனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை இயக்குநர் மீரா, கவுன்சிலர் ராஜாராமன், வட்டார மருத்துவ அலுவலர் மேகலா, சுகாதார மேற் பார்வையாளர் ராமதாஸ், கோவிந்தராஜ் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior