உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 04, 2010

ஏக்தா நம்பிக்கை மையத்தில் 4 நாள் இலவச பயிற்சி முகாம்

 கிள்ளை: 

                 ஏக்தா நம்பிக்கை மையத்தில் குழந்தைகள், பெண்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்கு விழிப்புணர்வு மற்றும் திறன் வளர்ப்பு குறித்த 4 நாள் இலவச சிறப்பு பயிற்சி முகாம் துவங்கியது. சிதம்பரம் அடுத்த கிள்ளை ஏக்தா நம்பிக்கை மையத்தில் கோடைகாலத்தையொட்டி குழந்தைகள், பெண்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்கு விழிப்புணர்வு மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நேற்று 4ம் தேதி துவங்கியது. இம்மாதம் 7ம் தேதி வரை பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. துவக்க விழாவில் மைய ஒருங்கிணைப்பாளர் தமிழ்மணி வரவேற்றார். புதுச்சேரி ஆரோவில் சக்தி இல்லம் ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுக்கு தையல் மற்றும் ஓவியப் பயிற்சியும், குழந்தைகளுக்கு விளையாட்டுப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டுகளை குணவதி, பபிதா உள்ளிட்ட விழா குழுவினர்கள் செய்திருந்தனர். நவாப்பேட்டை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முகாமில் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior